ஓமந்தை மத்திய கல்லூரியின்
புதிய அதிபர் பதவியேற்பு
10/10/2022
ஓமந்தை மத்திய கல்லூரியின் புதிய அதிபரை இன்முகத்துடன் வரவேற்பதோடு, புதிய அதிபரின் பணி மென்மேலும் சிறப்புற எமதுஅன்பானவாழ்த்துக்கள்.
பெரு மதிப்பிற்குரியஅதிபர் பவேந்திரன் ஆசிரியர்
அவர்களை அன்போடு வருக வருக என
இருகரம் கூப்பி வரவேற்றுக்கொள்கின்றோம்.
வன்னி மண்ணின் வரலாறு சொல்லிடும்
வளமிக்க ஓமந்தைப்
பதியில் ஓங்கியே உயர்ந்து நின்றிடும்
மத்திய கல்லூரியின்
தலைமைத்துவப் பெரும் பொறுப்பை
இதயமதாய் ஏற்றிடும்
பெரு மதிப்பிற்குரிய
அதிபர் பவேந்திரன் ஆசிரியர் அவர்களை
அன்போடு வருக வருக என இருகரம் கூப்பி வரவேற்றுக்
கொள்கின்றோம்.
நீவிர் கற்றிட்ட அரும் கல்வியின் பெருமை கூறிடும் இன்றைய இனிய நந்நாளிலே கடவுளின் அருளுடன் அஷ்ட ஐஸ்வர்யங்கள் பெற்று என்றென்றும் சிரஞ்சீவியாக வெற்றி வாகை சூடி இனிதாக வாழ்ந்திட இதயம் நிறைந்து வாழ்த்துகின்றோம்🙏🏾
நல்வாழ்த்துக்களுடன்
கல்லூரிப்
பழைய மாணவர்கள்
இன்றைய நாளில் எமது ஓமந்தை மத்திய கல்லூரியில்
சிறப்பாக நடந்தேறிய புதிய அதிபர் பதவியேற்பு வைபவத்தை சிறந்த முறையில் திறம்பட ஒழுங்கமைத்து நெறிப்படுத்திய எமது கல்லூரியின் பழைய மாணவர்கள், ஆசிரியர்கள், பயிலும் மாணவர்கள்,
பெற்றோர்கள்,
நண்பர்கள், ஓமந்தை வாழ் மக்கள் மற்றும் விழாவில் பங்கேற்று
சிறப்பித்த உங்கள் அனைவருக்கும் மனம் நிறைந்திட்ட நன்றிகளைத் தெரிவித்துக்கொள்ள பெரிதும் கடமைப் பட்டுள்ளோம்.
No comments:
Post a Comment