வன்னி நலன்புரிச்சங்கம் 08.12.2013 ஞாயிற்றுக்கிழமை இலண்டன் வெம்பிளி கிறிஸ்ரல் (CRYSTAL HALL)மண்டபத்தில் நடைபெற்ற வருடாந்த மருதநிலா ஒன்றுகூடலும், நூல்வெளியீடும், சங்கத்தின் தலைவர் கலாநிதி ச.பரமலிங்கம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு இளைப்பாறிய வவுனியா உதவி அரசாங்க அதிபரும்,ஓமந்தை மத்திய கல்லூரியின் விசேட பழைய மாணவரும், "இலங்கையின் வன்னிமாவட்டங்கள் - ஒரு கையேடு" என்னும் நூலின் தமிழாக்ககுழுவின் தலைவருமாகிய திரு. கந்தையா ஐயம்பிள்ளை பிரதம விருந்தினராகவும், ஓய்வுபெற்ற வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.சிதம்பரப்பிள்ளை இரகுநாதபிள்ளை அர்களும், ஓய்வுபெற்ற வவுனியா வடக்கு (நெடுங்கேணி) உதவி அரசாங்க அதிபர் திரு. சின்னையா பாலசுந்தரம் அவர்களும் கௌரவ விருந்தினர்களாகக் கலந்து சிறப்பித்தனர். முன்னாள் யாழ் - பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி இ. நித்தியானந்தன் அவர்கள் நூலைப்பற்றிய ஆய்வுரையையும், இலண்டன் தமிழ் இலக்கிய மன்றத்தலைவர் வவுனியூர் திரு. இரா. உதயணன் அவர்கள் நூல் அறிமுகவுரையும் ஆற்றினர். சங்கத்தின் செயலாளர் திரு குகதாசன் மயூரன் நன்றியுரை கூறினார். மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து, பிரபல தென்னக சினிமாப் பாடகர் அமரர் சௌந்தரராஜனின் மகனான திரு. செல்வகுமார் குழுவினரின் இன்னிசைவிருந்து சிறப்பு நிகழ்ச்சியாக இடம்பெற்றது. இந்நிகழ்சியின் சில படங்களை இங்கே காணுங்கள்.
+
No comments:
Post a Comment